May 6, 2026
Thisaigal NewsYouTube
தாஃபிஸ் பள்ளி மாணவர்கள் மீது வன்முறை: சம்பந்தப்பட்டவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க ஸாஹிட் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

தாஃபிஸ் பள்ளி மாணவர்கள் மீது வன்முறை: சம்பந்தப்பட்டவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க ஸாஹிட் வலியுறுத்து

Share:

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.20-

தாஃபிஸ் சமயப் பள்ளி மாணவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

அண்மையில் சபாவில் தாஃபிஸ் பள்ளி மாணவர்களை, ஆசிரியர் ஒருவர் காலால் எட்டி உதைத்து, தலைக்கவசத்தால் தாக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.

அது குறித்து கருத்துத் தெரிவித்த ஸாஹிட், மாணவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது, அவர்களைத் துன்புறுத்துவது போன்ற எந்த ஒரு சம்பவத்தையும் அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக, மாணவர்களுக்கு நெறிமுறைகளையும், அன்பையும், நல்ல குணங்களையும் போதிப்பதற்காக உருவாக்கப்பட்ட இது போன்ற சமயப் பள்ளிகளில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது, முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்றும் ஸாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மாணவர்களைத் தாக்கிய ஆசிரியர் பள்ளி நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்