Mar 15, 2026
Thisaigal NewsYouTube
பணமில்லை என்று பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் இருக்கக்கூடாது - டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன்
தற்போதைய செய்திகள்

பணமில்லை என்று பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் இருக்கக்கூடாது - டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன்

Share:

கூலிம், டிசம்பர்.13-

கெடா மாநிலத்திலுள்ள அனைத்து பிள்ளைகளும் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டும். பெற்றோர்களிடம் பணமில்லை, பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு வசதியில்லை என்ற காரணத்தை முன்வைத்து பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் இருக்கக்கூடாது என்று உள்துறை அமைச்சரும் கெடா மாநில பக்காத்தான் ஹரப்பான் கட்சியின் மேம்பாட்டுத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் குறிப்பிட்டார் .

இன்று பாடாங் செராய் தொகுதியின் கிராமத்து மேம்பாட்டு மற்றும் பாதுகாப்புச் குழுவின் ஏற்பாட்டில் கூலிம் ஹய் தேக் பாக்கில் அமைந்துள்ள ஹய் தேக் பாக் விளையாட்டு மண்டபத்தில் நடைபெற்ற "பள்ளிக்கு திரும்புவோம்" நிகழ்விற்குத் தலைமையேற்று உரையாற்றும் போது சைஃபுடின் இதனைத் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டின் பள்ளித் தொடக்கத்தின் முன் ஏற்பாடுகளில் ஒன்றான பிள்ளைகளுக்கு புத்தம் புதிய சீருடைகள், காலணிகள் மற்றும் பள்ளி உபகரணங்களை வாங்குதல் என பல செலவுகள் பெற்றோர்களுக்கு இருக்கின்றன.

அவர்களின் சுமைகளைக் குறைப்பதற்காகவே முதல் கட்டமாக பாடாங் செராய் வட்டாரத்திலுள்ள 1000 மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் என 3 லட்சம் ரிங்கிட் செலவில் பள்ளிக்குத் தேவையான பொருட்கள் வாங்குவத்தற்கான பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக டத்தோ ஸ்ரீ சைஃபுடின் குறிப்பிட்டார்.

பசார் ராயா சாக்கான் (SAKKAN) ஒத்துழைப்புடன் பள்ளிச் சீருடைகளும் பொருட்களும் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக சைஃபுடின் தெரிவித்தார்.

கிராமப்புறங்களிலுள்ள வசதி குறைந்த நிலைகளில் இருக்கும் பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டு இப்பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, கிராமப் புறங்களில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கே இந்த கிராமப்புற மேம்பாட்டு மற்றும் பாதுகாப்புக் குழு செயல்படும் என்றார் அமைச்சர் சைஃபுடின்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்