Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு
தற்போதைய செய்திகள்

பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதுடன், முதலீட்டாளர்களிடையே மலேசியாவின் மதிப்பையும் உயர்த்தியுள்ளதாக முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரான கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த பொருளாதார முன்னேற்றத்தின் பயன்களை சாதாரண மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மலேசியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 5.3 விழுக்காடு வளர்ச்சியை பதிவு செய்து, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரை விட முன்னிலை பெற்றுள்ளது.

அதேவேளையில், அமெரிக்க டாலருக்கு எதிராக ஆசியாவில் சிறப்பாக செயல்படும் நாணயமாக ரிங்கிட் மதிப்பிடப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அதன் நிலையைத் தக்க வைத்து வருவதாகவும் கைரி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஜிடிபி உயர்வு, வேலைவாய்ப்பின்மை குறைவு, ரிங்கிட் மதிப்பு உயர்வு போன்ற பெரிய பொருளாதார எண்ணிக்கைகளின் பயனை சாதாரண மக்கள் இன்னும் உணரவில்லை என்றும் கைரி தெரிவித்துள்ளார்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு