Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு
தற்போதைய செய்திகள்

பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதுடன், முதலீட்டாளர்களிடையே மலேசியாவின் மதிப்பையும் உயர்த்தியுள்ளதாக முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரான கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த பொருளாதார முன்னேற்றத்தின் பயன்களை சாதாரண மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மலேசியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 5.3 விழுக்காடு வளர்ச்சியை பதிவு செய்து, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரை விட முன்னிலை பெற்றுள்ளது.

அதேவேளையில், அமெரிக்க டாலருக்கு எதிராக ஆசியாவில் சிறப்பாக செயல்படும் நாணயமாக ரிங்கிட் மதிப்பிடப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அதன் நிலையைத் தக்க வைத்து வருவதாகவும் கைரி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஜிடிபி உயர்வு, வேலைவாய்ப்பின்மை குறைவு, ரிங்கிட் மதிப்பு உயர்வு போன்ற பெரிய பொருளாதார எண்ணிக்கைகளின் பயனை சாதாரண மக்கள் இன்னும் உணரவில்லை என்றும் கைரி தெரிவித்துள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு