Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் பிரஜையானார் மியா
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் பிரஜையானார் மியா

Share:

தனது தாய் மேற்கொண்ட பல வருட கால முயற்சிக்கு பின், எட்டு வயதுடைய மியா தியோ ஹெரிசோன், என்கிற சிறுமிக்கு மலேசிய குடியுரிமை கிடைக்க பெற்றதாக டத்தோ செரி டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார்.

அச்சிறுமியின் தாயான ஈஸ்தர் தியோ தனது மகளின் குடியுரிமை சான்றிதழை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்- லிடம் இருந்து பெற்று கொண்டதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ முகநூலில் நேற்று பதிவேற்றம் செய்திருந்தார்.

இவ்வாண்டு ஜூலை மாதம் பத்து பாஹாட் -டில் அச்சிறுமியின் தாயை சந்தித்த போது தனது மகளை ஜெர்மனியில் ஈன்றெடுத்ததாகவும், பின் மலேசியாவில் பல ஆண்டுகள் முயற்சித்தும் குடியுரிமை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

அவர்களுக்கு உதவும் வகையில் உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியதுடன் நாடாளுமன்றத்தில் இதுக்குறித்து குரல் கொடுத்ததாக டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ விவரித்தார்.

வெளிநாட்டில் பிரசவிக்கும் பெண்கள் மலேசியாவில் குடியுரிமை பெறுவதற்கு எதிர்கொள்ளும் சிக்கல்களை தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் எடுக்கவுள்ளார் என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ அறிவித்தார்.

Related News