Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விழாக் கால அதிகபட்ச விலை கட்டுப்பாட்டுத் திட்டம், ரஸ்மா மடானி விற்பனைத் திட்டம் இரண்டும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்

Share:

கோத்தா டாமான்சாரா, ஜன.26-

சீனப் புத்தாண்டை முன்னிட்டு SHMMP எனப்படும் விழாக் கால அதிகபட்ச விலை கட்டுப்பாட்டுத் திட்டம் , ரஹ்மா மடானி விற்பனைத் திட்டம் ஆகிய இரண்டையும் சிலாங்கூர் அரசு ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறது. இதன் மூலம் விழாக் காலங்களில் பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்படும் என உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் பின் முகமட் அலி தெரிவித்தார்.

இந்த திட்டங்களின் மூலம் பயனீட்டாளர்கள் நியாயமான விலையில் பொருட்களை வாங்க முடியும். அவை செயல்படுத்தப்படுவதால் பயனீட்டாளர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டங்கள் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 2 வரை சிலாங்கூரில் 27 இடங்களில் நடப்பில் இருக்கும் என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று கோத்தா டாமான்சாரா என்.எஸ்.கே பேரங்காடியில் சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோஶ்ரீ அமிருடின் பின் ஷரி, சிலாங்கூர் மாநில புறநகர் மேம்பாடு, ஒருமைப்பாடு, பயனீட்டாளர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஹஜி ரிசாம் பின் ஹஜி இஸ்மாயில் ஆகியோர் விலைக் கட்டுப்பாட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட வியாபாரிகள் அதிகமாக விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. கடைகளின் உரிமையாளர்கள் இளஞ்சிவப்பு நிற விலைப்பட்டியலை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்