சிலாங்கூர்,ஆகஸ்ட் 04-
BikeCare-1000 என்ற திட்டத்தின் கீழ், சிலாங்கூரிலுள்ள B40 பிரிவைச் சேர்ந்த மொத்தம் 200 பேர், மோட்டார் சைக்கிளை வாங்குவதற்கான தலா ஆயிரம் ரிங்கிட் முன்பணம் உதவி தொகையைப் பெற்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன்பணம் செலுத்துவதில் Gig அல்லது P-hailing தொழிலாளிகள் சுமையைக் குறைக்க 200 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் , V Papparaidu தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அந்த உதவி நிதி வாயிலாக பயனடைந்த 200 பேரும் 10 ஆயிரம் ரிங்கிட்டுக்கு குறைவான மோட்டார் சைக்கிளுக்கான மீதப் பணத்தை மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் கட்ட திட்டத்தில் 159 அந்த உதவித்தொகையைப் பெற்ற நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட விழாவில் 41 பேருக்கு அந்நிதி வழங்கப்பட்டது.








