கோலாலம்பூர், அக்டோபர்.30-
சாலை போக்குவரத்து சம்மன்களுக்கு அரச மலேசிய போலீஸ் படை 70 விழுக்காடு வரை கட்டணக் கழிவை வழங்க முன்வந்துள்ளது. இந்த சலுகை வரும் நவம்பர் முதல் தேதி தொடங்கி டிசம்பர் 30 ஆம் தேதி வரை நீடிக்கவிருக்கிறது.
வரும் 2026 ஆம் ஆண்டு முதல் அரச மலேசிய போலீஸ் படையின் போக்குவரத்து சம்மன்களுக்கு அபராதத்தைச் செலுத்தும் முறையில் புதிய அணுகுமுறை அமல்படுத்தப்படவிருக்கிறது.
அதற்கு முன்னதாகவே நிலுவையில் உள்ள சம்மன்களுக்கு மக்கள் தீர்வு காணும் வகையில் 70 விழுக்காடு வரை கட்டணக் கழிவு வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கடந்த அக்டேபார் 22 ஆம் தேதி அறிவித்து இருந்தார்.








