நான்கு நண்பர்கள் கூட்டாக சேர்ந்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றை ஈப்போ போலீசார் முறியடித்துள்ளனர். கடந்த வாரம் ஈப்போவில் இரண்டு வெவ்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 25 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள 72.49 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ செரி முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் பாஸ்ரி தெரிவித்தார்.
முதல் சம்பவம் ஈப்போ, க்லெபாங் ட்ரோபிக்கா என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 மற்றும் 36 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவ்விருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் பயன்படுத்திய காரிலிருந்து 72.49 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக யுஸ்ரி ஹாஸ்ஸான் குறிப்பிட்டார். இரண்டாவது சோதனை, ஈப்போ, கம்போங் ராப்பாட்டில் நடத்தப்பட்டதில் அந்த கும்பலுடன் தொடர்புடைய 30 மற்றும் 40 வயதுடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

போலீஸ்காரர் உயிரிழந்த விபத்து: 80 வயது மூதாட்டி கைது

மலேசியாவின் AI, 5G மற்றும் டிஜிட்டல் மாற்றத் திட்டங்களை முன்னெடுப்பதில் பீடுநடை போடுகிறார் கோபிந்த் சிங் டியோ


