நான்கு நண்பர்கள் கூட்டாக சேர்ந்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றை ஈப்போ போலீசார் முறியடித்துள்ளனர். கடந்த வாரம் ஈப்போவில் இரண்டு வெவ்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 25 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள 72.49 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ செரி முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் பாஸ்ரி தெரிவித்தார்.
முதல் சம்பவம் ஈப்போ, க்லெபாங் ட்ரோபிக்கா என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 மற்றும் 36 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவ்விருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் பயன்படுத்திய காரிலிருந்து 72.49 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக யுஸ்ரி ஹாஸ்ஸான் குறிப்பிட்டார். இரண்டாவது சோதனை, ஈப்போ, கம்போங் ராப்பாட்டில் நடத்தப்பட்டதில் அந்த கும்பலுடன் தொடர்புடைய 30 மற்றும் 40 வயதுடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


