கைதிகளை தங்கள் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்திக் கொள்வதில் சில முதலாளிமார்கள் இன்னமும் அச்சத்திலும் தயக்கத்திலும் இருப்பதாக எம்.இ.எப் எனப்படும் மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனம் ஒப்புக்கொண்டுள்ளது.
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் கைதிகளுக்கு, வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பாக மனித வள அமைச்சர் வி.சிவக்குமாரின் பரிந்துரைகளை, எம்.இ.எப் முழு மனதோடு ஆதரிக்கும் அதே வேளையில், தனியார் நிறுவனங்கள் மட்டும்மல்லாது, அரசு சார்பு நிறுவனங்களும் முன்னாள் கைதிகளைத் தங்கள் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்திக்கொள்வதற்கு தயக்கம் காட்டி வருவதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சையத் ஹுசைன் சையத் ஹுஸ்மான் தெரிவித்தார்.
சிறையில் உள்ள 70,000 க்கும் மேற்பட்ட கைதிகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் அதே வேளையில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதோடு, தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள தொழில்துறைகளுக்குக் கைதிகள் மூலம் ஆள்பல பற்றாக்குறையை நிறைவு செய்ய முடியும் என்று அண்மையில் அமைச்சர் சிவகுமார் முன்வைத்துள்ள பரிந்துரை தொடர்பில் சையத் ஹுசைன் கருத்துரைத்தார்.
Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


