Jun 15, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கைதிகளை வேலைக்கு அமர்த்த முதலாளிமார்கள் அச்சம்

Share:

கைதிகளை தங்கள் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்திக் கொள்வதில் சில முதலாளிமார்கள் இன்ன​மும் அச்சத்திலும் தயக்கத்திலும் இருப்பதாக எம்.இ.எப் எனப்படும் மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனம் ஒப்புக்கொண்டுள்ளது.

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் கைதிகளுக்கு, வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பாக மனித வள அமைச்சர் வி.சிவக்குமாரின் பரிந்துரைகளை, எம்.இ.எப் முழு மனதோடு ஆதரிக்கும் அதே வேளையில், தனியார் நிறுவனங்கள் மட்டும்மல்லாது, அரசு சார்பு நிறுவனங்களும் முன்னாள் கைதிகளைத் தங்கள் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்திக்கொள்வதற்கு தயக்கம் காட்டி வருவதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சையத் ஹுசைன் சையத் ஹுஸ்மான் தெரிவித்தார்.

சிறையில் உள்ள 70,000 க்கும் மேற்பட்ட கைதிகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் அதே வேளையில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதோடு, தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள தொழில்துறைகளுக்குக் கைதிகள் ​மூலம் ஆள்பல பற்றாக்குறையை நிறைவு செய்ய முடியும் என்று அண்மையில் அமைச்சர் சிவகுமார் முன்வைத்துள்ள பரிந்துரை தொடர்பில் சையத் ஹுசைன் கருத்துரைத்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்