கோலா நெருஸ், பிப்ரவரி.25-
கோலா திரெங்கானு, ஜாலான் வாகாஃப் தெம்பெசுவில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில், அதிநவீன மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற குத்தகையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காலை 11.50 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், 34 வயதான முகமது அன்வார் ஹாஷிம் என்பவர் தனது டுகாத்தி மோன்ஸ்டர் 795 ரக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, நான்கு சக்கர வாகனத்துடன் மோதி பலத்த காயமடைந்தார்.
கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர் கூறுகையில், பாதிக்கப்பட்ட நபர் செத்தியூவில் உள்ள தனது வீட்டிலிருந்து வாகாஃப் தெம்பெசுவில் உள்ள ஒரு கடைக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தாகக் குறிப்பிட்டார்.
குத்தகையாளர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிசான் நவாரா ரக வாகனம் மோதித் தள்ளியதாக அவர் குறிப்பிட்டார்.








