முயர்
மூன்று மாதங்களுக்கு முன், கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரிடம் பிறப்புறுப்பை காண்பித்த குற்றத்திற்காக, இன்று,முயர், செசியன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 25 வயது ஆர் மனேஷ் குற்றச்சாட்டை மறுத்து மறு விசாரணை கோரினார்.
இந்நிலையில், ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கறிஞரை நியமிப்பதற்கும் அவ்வழக்கின் மறுசெவிமடுப்பு செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆர் மனேஷ் -க்கு கடந்த மே மாதம், செகாமட்-இல் உள்ள வீடொன்றில், 13 இளம் பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது தொடர்பாக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








