14 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பதின்ம வயதுடைய இரு இளைஞர்கள் ஈப்போ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
தாஹ்ஃபிஸ் சமயப் பள்ளியை சேர்ந்த 16 வயதுடை மாணவன் மற்றும் 17 வயதுடைய மற்றொரு ஆடவர் மாஜிஸ்திரேட் ஃபாராஹ் நபிலா முன்னிலையில் நிறுத்தப்ப்டடு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இவ்விருவரும் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் ஜாலான் சிப்டு, ஜாலான் கோபேங் என்ற இடத்தில 14 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இருவரும் குற்றத்தை மறுத்து விசாரணை கோரியதால் அவர்களை ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 3 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் ஃபராஹ் நபிலா அனுமதி அளித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


