14 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பதின்ம வயதுடைய இரு இளைஞர்கள் ஈப்போ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
தாஹ்ஃபிஸ் சமயப் பள்ளியை சேர்ந்த 16 வயதுடை மாணவன் மற்றும் 17 வயதுடைய மற்றொரு ஆடவர் மாஜிஸ்திரேட் ஃபாராஹ் நபிலா முன்னிலையில் நிறுத்தப்ப்டடு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இவ்விருவரும் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் ஜாலான் சிப்டு, ஜாலான் கோபேங் என்ற இடத்தில 14 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இருவரும் குற்றத்தை மறுத்து விசாரணை கோரியதால் அவர்களை ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 3 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் ஃபராஹ் நபிலா அனுமதி அளித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


