Apr 16, 2026
Thisaigal NewsYouTube
காப்பகத்தில் சிறுவர்கள் சித்ரவதை: உரிமையாளர் மீது  குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

காப்பகத்தில் சிறுவர்கள் சித்ரவதை: உரிமையாளர் மீது குற்றச்சாட்டு

Share:

பத்துகேவ்ஸ், தாமான் செலாயாங் பெர்மாத்தாவில் உள்ள ஒரு காப்பகத்தில் 8 முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்களைத் துன்புறுத்தியதாகவும், உரிமம் இன்றி காப்பகத்தை நடத்தியதாகவும் அதன் உரிமையாளரான 31 வயது எஸ். வேலன் என்பவர் மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

செலயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட வேலன், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை சிறார்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகளை இழைத்து வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி நோராஸ்லின் ஒஸ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட வேலன், தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதைத் தொடர்ந்து அவர் 40 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஜாமீன் காலத்தில் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களையோ அல்லது சாட்சிகளையோ வேலை தொடர்புகொள்ளக்கூடாது என்று நீதிபதி நினைவுறுத்தினார்.

வேலன், அந்த காப்பகத்தில் உள்ள சிறார்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புரிந்ததாக ஏற்கனவே நான்கு பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

பிறப்புப் பதிவில் தாமதம் வேண்டாம் - உள்துறை அமைச்சர் நினைவுறுத்து

பிறப்புப் பதிவில் தாமதம் வேண்டாம் - உள்துறை அமைச்சர் நினைவுறுத்து

மெர்லிமாவ் போலீஸ் நிலையம் குறித்து AI மூலம் போலி வீடியோ: இளம்பெண் மீது போலீஸ் விசாரணை

மெர்லிமாவ் போலீஸ் நிலையம் குறித்து AI மூலம் போலி வீடியோ: இளம்பெண் மீது போலீஸ் விசாரணை

எரிபொருள் விலை குறித்த போலிச் செய்தி: 5 பேருக்கு தலா 25,000 ரிங்கிட் அபராதம்

எரிபொருள் விலை குறித்த போலிச் செய்தி: 5 பேருக்கு தலா 25,000 ரிங்கிட் அபராதம்

புதிய ஆட்சேர்ப்பு முறை குறித்த வதந்தி: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கண்டனம்

புதிய ஆட்சேர்ப்பு முறை குறித்த வதந்தி: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கண்டனம்

  மெக்ஸ் நெடுஞ்சாலையில் 4 கார்கள் மோதி விபத்து: பிரபல பாடகி சித்தி நுர்ஹாலிசா சொற்ப காயங்களுடன் தப்பினார்

மெக்ஸ் நெடுஞ்சாலையில் 4 கார்கள் மோதி விபத்து: பிரபல பாடகி சித்தி நுர்ஹாலிசா சொற்ப காயங்களுடன் தப்பினார்

கொலை முயற்சி வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் : மருத்துவமனையில் அனுமதிக்கக் குடும்பத்தினர் கோரிக்கை

கொலை முயற்சி வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் : மருத்துவமனையில் அனுமதிக்கக் குடும்பத்தினர் கோரிக்கை