Apr 2, 2026
Thisaigal NewsYouTube
பெந்தோங்கில் மாயமான இந்தியக் குடும்பம் மீட்பு: குடும்பத் தகராறே காரணம் என போலீஸ் தகவல்
தற்போதைய செய்திகள்

பெந்தோங்கில் மாயமான இந்தியக் குடும்பம் மீட்பு: குடும்பத் தகராறே காரணம் என போலீஸ் தகவல்

Share:

பகாங், பெந்தோங்கில் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பெந்தோங், தாமான் ஓர்க்கிட் பகுதியைச் சேர்ந்த 41 வயதான எம். ரேகா மற்றும் அவரது ஐந்து பிள்ளைகளான 19 வயது ரூபன் , 17 வயது ஷரிவினா நாயர் , 16 வயது ஷாசினி நாயர் , 14 வயது பிரிதிவி நாயர் மற்றும் 4 வயது சிறுவன் லஷ்வின் நாயர் ஆகியோரே மீட்கப்பட்டவர்கள் ஆவர் என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரிண்டெண்டென் ஜைஹாம் முகமது கஹார் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் இவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் ஆஜராகினர்.

அறுவரும் காணாமல் போனது தொடர்பாக தாங்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவே, தனது கணவருக்குத் தெரிவிக்காமல் ரேகா தனது பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது" என்று சூப்பரிண்டெண்டென் ஜைஹாம் தெரிவித்தார்.

முன்னதாக, தனது மனைவி மற்றும் பிள்ளைகளைக் காணவில்லை என 43 வயதான குடும்பத் தலைவர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இவர்களைக் கண்டுபிடிக்க ஒத்துழைப்பு வழங்கிய பெந்தோங் மக்களுக்கும் மற்ற அனைத்து தரப்பினருக்கும் போலீஸ் துறையினர் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக சூப்பரிண்டெண்டென் ஜைஹாம் தெரிவித்தார்.

Related News

வெ.3 மில்லியன் செலவில் பீடோரில் நவீன மின்சுடலை – டத்தோ சிவநேசன் தகவல்

வெ.3 மில்லியன் செலவில் பீடோரில் நவீன மின்சுடலை – டத்தோ சிவநேசன் தகவல்

கிள்ளான் ரோட்டரி கிளப் ஏற்பாடு: பேரிடர் நிவாரண நிதி வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா

கிள்ளான் ரோட்டரி கிளப் ஏற்பாடு: பேரிடர் நிவாரண நிதி வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா

கார்ப்பரேட் குற்றங்கள்’ புதிய அச்சுறுத்தல்; ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் எச்சரிக்கை

கார்ப்பரேட் குற்றங்கள்’ புதிய அச்சுறுத்தல்; ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் எச்சரிக்கை

சிறுமிகளிடம் அநாகரீகமாக நடந்த 54 வயது நபர் கைது

சிறுமிகளிடம் அநாகரீகமாக நடந்த 54 வயது நபர் கைது

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை