Dec 2, 2025
Thisaigal NewsYouTube
BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை
தற்போதைய செய்திகள்

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.02-

BRICS கூட்டமைப்பில் மலேசியா சக பங்காளியாக பங்கேற்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி, அதன் வேகத்தை அதிகரிக்கக் கூடும் என வெளியுறவு அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் BRICS கூட்டமைப்பில் சக பங்காளி நாடுகளில் ஒன்றாக மலேசியா அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் இந்த முடிவானது நமது சுதந்திரத்தையும், சார்பில்லா வெளியுறவுக் கொள்கையையும் காட்டுவதாகத் தெரிவித்துள்ள முகமட் ஹசான், BRICS கூட்டமைப்பில் பங்காளியாக இணைவது உலகளாவிய அளவில் மலேசியாவின் நிலையை உயர்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், ஆசியான், ஐ.நா, இஸ்லாமியக் கூட்டறவு அமைப்பு, அணி சேரா இயக்கம் மற்றும் ஜி77 உள்ளிட்ட அமைப்புகளில் மலேசியாவின் பங்களிப்பையும் இது வலுப்படுத்துவதாக முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

BRICS-இல் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும், உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த கருத்தின்படி எடுக்கப்படுவதால், மலேசியா தனது முழு உறுப்பினர் பதவிக்கான ஆதரவைப் பெற, அதன் பங்காளி அந்தஸ்தைத் தொடர்ந்து பயன்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு  கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்