நாட்டில் மலாய்க்காரர்களின் ஏகபோக கட்சியென ஒரு காலத்தில் புகழப்பட்ட அம்னோ , இன்று சொந்த கட்சியினரால் மிக இழிவாகப் பார்க்கப்படுவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி , 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் மிக மோசமான அடைவு நிலையை அம்னோ பதிவு செய்ததைத் தொடர்ந்து துன் மகாதீர் இதனை குறிப்பிட்டுள்ளார். அம்னோவின் போராட்டத்திற்கு அதன் தலைவர்கள் முன்னுரிமை அளிப்பதாக இல்லை என்ற சூழலிலும் அக்கட்சியில் அதிரடியான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.
இந்நிலையில் அம்னோவில் அங்கத்துவம் பெற்றிருப்பவர்கள் தங்களின் தாய்க் கட்சியை இழிவாக பார்க்கும் நிலை ஏற்பட்டிருப்பது , துரதிர்ஷ்டவசமானது என்று அக்கட்சியின் முன்னாள் தலைவரான துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


