மலேசியாவின் புலாவ் சக்கார் கடற்பகுதியில் நேற்று காலை சுநோர்கெலிங் என்ற பொழுது போக்கு முக்குளிப்பு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
78 வயதான கென்னத் ரே க்ரூஸ் என்ற அந்நபர் பின்னர் லகாட் டத்து மருத்துவமனையில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான எம்.எம்.இ.ஏ-வின் லகாட் டத்து பிரிவு இயக்குநர் துல்ஃபிகர் அலி வெளியிட்டுள்ள தகவலில், நேற்று 11.20 மணியளவில், இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கையானது உடனடியாக தொடங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாகவும் துல்ஃபிகர் அலி குறிப்பிட்டுள்ளார்.








