Feb 24, 2026
Thisaigal NewsYouTube
செராஸில் கும்பல் தாக்குதல்: ஐந்து பேர் கைது
தற்போதைய செய்திகள்

செராஸில் கும்பல் தாக்குதல்: ஐந்து பேர் கைது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

கோலாலம்பூர், செராஸ் பகுதியில் ஆயுதங்களுடன் நடத்தப்பட்ட கும்பல் தாக்குதலில் நபர் ஒருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, போலீசார் ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் சனிக்கிழமை செராஸ், பிங்கிரான் பிபிஆர் அடுக்குமாடி வீட்டுப் பகுதியில் ஒரு கும்பலால் கத்தி மற்றும் பேஸ்பால் மட்டையால் தான் தாக்கப்பட்டதாக அந்த நபர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்த மோதல் குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்ததில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் கடந்த பிப்ரவரி 21 மற்றும் பிப்ரவரி 23 ஆகிய தேதிகளில் அதே பகுதியில் கைது செய்யப்பட்டனர் என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமட் ரொஸ்டி டாவுட் தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளான புகார்தாரர் கையில் காயமடைந்துள்ளாரென்றும், அவர் இன்னும் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ரொஸ்டி டாவுட் மேலும் கூறினார்.

"கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் மூவர் மீது ஏற்கனவே குற்றப் பின்னணி உள்ளது. சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் எவரும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதியானது. சந்தேக நபர்களில் ஒருவர், புகார்தாரரின் மனைவியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதே இந்த மோதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது," என்று அவர் கூறினார்.

Related News

"குவாசா ஓராங் மூடா" கிராமப்புறங்களிலுள்ள இளைஞர்களுக்கானத் திட்டமாகத் தோற்றுவிக்கப்படும்

"குவாசா ஓராங் மூடா" கிராமப்புறங்களிலுள்ள இளைஞர்களுக்கானத் திட்டமாகத் தோற்றுவிக்கப்படும்

எல்ஆர்டி கிளானா ஜெயா ரயில் பாதிப்பு: நெரிசலான நேரத்தில் பயணிகள் அவதி

எல்ஆர்டி கிளானா ஜெயா ரயில் பாதிப்பு: நெரிசலான நேரத்தில் பயணிகள் அவதி

போலீஸ் என ஆள்மாறாட்டம் செய்து கூட்டுக் கொள்ளை: இருவர் மீது குற்றச்சாட்டு

போலீஸ் என ஆள்மாறாட்டம் செய்து கூட்டுக் கொள்ளை: இருவர் மீது குற்றச்சாட்டு

அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி மார்ச் 13 முதல் வழங்கப்படும்

அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி மார்ச் 13 முதல் வழங்கப்படும்

நாடற்ற குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்கப்படும்- சுகாதார அமைச்சர் தகவல்

நாடற்ற குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்கப்படும்- சுகாதார அமைச்சர் தகவல்

மாமன்னருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு - முக்கிய விவகாரங்கள் குறித்து  கலந்துரையாடினர்

மாமன்னருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு - முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்