Aug 12, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவையில் ரஃபிஸி ரம்லி நிலை : எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை
தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் ரஃபிஸி ரம்லி நிலை : எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை

Share:

கோலாலம்பூர், மே.27-

கடந்த வாரம் நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் தனது துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளத் தவறிவிட்ட ரஃபிஸி ரம்லி நிலை தொடர்பில் அமைச்சரவையில் இதுவரையில் எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.

தற்போது அனைவரின் கவனமும் 46 ஆவது ஆசியான் மாநாட்டை நோக்கியுள்ளது. ரஃபிஸி விவகாரம் பற்றி இதுவரையில் எதுவும் தெரியவில்லை என்று டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளத் தாம் தவறி விட்டால் தாம் வகித்து வரும் பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று ரஃபிஸி ரம்லி அறிவித்து இருப்பது தொடர்பில் கருத்து கேட்ட போது டத்தோ பாஃமி மேற்கண்டவாறு கூறினார்.

Related News