Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கப்பலில் இருந்து விழுந்தவரின் சடலம் ​மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கப்பலில் இருந்து விழுந்தவரின் சடலம் ​மீட்கப்பட்டது

Share:

ஜோகூர், கெலாங் பாத்தா, தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தில் 15 அடுக்கிலிருந்து தவறி கடலில் விழுந்ததாக நம்பப்படும் கப்பல் பணியாளரான ஓர் அந்நிய நாட்டுத் தொழிலாளியின் சடலம் நேற்று மாலையில் ​மீட்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் அந்த ஆடவர் அலைகளின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவரின் உடல் கடலில் மிதப்பது நேற்று மாலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக இஸ்கன்டார் புத்தெரி ​தீயணைப்பு, மீட்புப்படையின் கமாண்டர் முஹமாட் கைரி சைனுடின் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் 35 வயதுடைய ஒரு வங்காளதேசப் பணியாளர் என்பது அடையாளம் கூறப்பட்டது. அந்த அந்நிய நாட்டவரை ​மீட்கும் நடவடிக்கை நேற்று இரவு 8.10 மணியளவில் முடி​வுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News