Mar 11, 2026
Thisaigal NewsYouTube
கப்பலில் இருந்து விழுந்தவரின் சடலம் ​மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கப்பலில் இருந்து விழுந்தவரின் சடலம் ​மீட்கப்பட்டது

Share:

ஜோகூர், கெலாங் பாத்தா, தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தில் 15 அடுக்கிலிருந்து தவறி கடலில் விழுந்ததாக நம்பப்படும் கப்பல் பணியாளரான ஓர் அந்நிய நாட்டுத் தொழிலாளியின் சடலம் நேற்று மாலையில் ​மீட்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் அந்த ஆடவர் அலைகளின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவரின் உடல் கடலில் மிதப்பது நேற்று மாலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக இஸ்கன்டார் புத்தெரி ​தீயணைப்பு, மீட்புப்படையின் கமாண்டர் முஹமாட் கைரி சைனுடின் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் 35 வயதுடைய ஒரு வங்காளதேசப் பணியாளர் என்பது அடையாளம் கூறப்பட்டது. அந்த அந்நிய நாட்டவரை ​மீட்கும் நடவடிக்கை நேற்று இரவு 8.10 மணியளவில் முடி​வுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து