Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காருக்குள் பிணமாகக் கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காருக்குள் பிணமாகக் கிடந்தனர்

Share:

ஜித்ரா, ஜூலை.07-

கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர், காருக்குள் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கெடா, ஜித்ரா அருகில் சுங்கை கோரோக் என்ற இடத்தில் அந்த அறுவர் காருக்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

ஓர் ஆண், ஒரு பெண் மற்றும் மூன்று சிறார்கள், ஒரு கைக்குழந்தை ஆகியோர் பிணமாகக் கிடந்ததாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஆற்றில் விழுந்து கிடந்த ஒரு வாகனத்தைப் பொதுமக்கள் சோதனையிட்ட போது, அறுவர் உயிரிழந்த சம்பவம் தெரிய வந்தது.

சடலங்களை அகற்றும் பணி இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. சம்பந்தப்பட்டவர்கள் கெடா, ஜெர்லினைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்து இருந்தனர்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது