Aug 10, 2026
Thisaigal NewsYouTube
இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைக் கண்டறிய  பல இயக்கங்களின் ஒத்துழைப்புடன் விரைவில் மாநாடு
தற்போதைய செய்திகள்

இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைக் கண்டறிய பல இயக்கங்களின் ஒத்துழைப்புடன் விரைவில் மாநாடு

Share:

சிரம்பான், ஏப்ரல்.12-

நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைக் கண்டறியவும், அவற்றை ஆராயவும், விரைவில் தேசிய அளவிலாான ஒரு மாநாடு நடத்தப்படும் என்று பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் அறிவித்துள்ளார்.

இந்து ஆலயங்கள் மற்றும் அவை சார்ந்த அமைப்புகளுடன் நின்று விடாமல், பல பொது இயக்கங்களின் கூட்டு ஒத்துழைப்புடன் இந்த மாநாடு சிறப்பாக நடத்தப்படும் என்று சண்முகம் மூக்கன் குறிப்பிட்டார்.

இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் பல சிக்கல்கள் கலந்தாலோசிக்கப்பட்டு, தீர்வு காண்பதற்கான வழி வகைகளை ஆராயும் களமாகவும் இந்த மாநாடு அமையும் என்று சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரும், ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் சுப்பிரமணியத்தின் முன்னெடுப்பில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சிரம்பான், ஜாலான் ராசாவில் அமைந்துள்ள ஆடிடோரியம் ஹொஸ்பிட்டல் மாவாரில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் இந்து ஆலயங்களை வளப்படுத்தும் கலந்தாய்வுக் கூட்டத்திற்குச் சிறப்பு வருகை புரிந்த சண்முகம் மூக்கன் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஈராண்டுகளில் நாட்டில் உள்ள ஆலயங்களின் மேம்பாட்டிற்காக பிரதமர் துறை 30 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியதாக சண்முகம் மூக்கன் குறிப்பிட்டார்.

அதில் பலர் பலனடைந்த நிலையில், சிலருக்கு அதனைப் பற்றிய முன்னெச்சரிக்கை இருத்தல் அவசியமாகும். ஆலயங்கள் சார்ந்த சிக்கல்களை ஆராயவும், பிரச்னைக்குத் தீர்வு காணவும் எந்தவோர் இயக்கமும் விடுபடாமல் அனைத்து இயக்கங்களும் ஒற்றிணைத்து, அவர்களின் ஒத்துழைப்புடன் பிரதமர் துறை இந்த மாபெரும் மாநாட்டை ஏற்று நடத்தும் என்று சண்முகன் மூக்கன் தமது உரையில் தெரிவித்தார்.

நாம் அனைவருக்கும் சமயம் சார்ந்த சிந்தனை மாற்றம் தேவை. அதேபோன்று நமது ஆலயங்களை வளப்படுத்த அவை எதிர்நோக்கக்கூடிய சிக்கல்களை ஆராய்வதும் அவசியமாகும் என்று சண்முகம் மூக்கன் வலியுறுத்தினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி