அம்பாங்கில் உள்ள ஜாலான் லோரோங் சபா தாமான் மலாவாத்தியில் காவல் துறை மேற்கொண்ட சோதனையில் போலி காவல் துறை அட்டையை வைத்திருந்ததற்காக உணவு விநியோகிப்பாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அளித்த அம்பாங் ஜெயா மாவட்டக் காவல் துறை தலைவர் எசிஸ்தன் கமிஷ்னர் முஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவிக்கயில், நேற்று காலை 11.15 மணி அளவில் அந்த ஆடவர் பிடிபட்டார் எனவும் சுயமாக உருவாக்கிய மஞ்சள் நீல நிறத்திலான அட்டை அவர் வசம் இருந்ததாகவும் முஹமாட் அசாம் இஸ்மாயில் கூறினார்.
அந்த அட்டைக்கான சரியான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், அந்த ஆடவர் காவல் துறை சட்டம் 1967 பிரிவு 89இன் படி விசாரிக்கப்படுவதாகவும் முஹமாட் அசாம் இஸ்மாயில் சொன்னார்.








