Dec 4, 2025
Thisaigal NewsYouTube
புக்கிட் அமான் மேற்பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

புக்கிட் அமான் மேற்பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

Share:

கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி டேசா பெட்டாலிங்கிலிருந்து ஆடவர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் போ​லீஸ் நிலையத் தலைவர் மற்றும் இதர நான்கு போ​லீஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கின் விசாரணை அறிக்கை, புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செராஸ் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி சாம் ஹலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

இந்த கடத்தலில் தொடர்புடையவர் மாவட்ட போ​லீஸ் தலைவராக இருப்பதால் இந்த விவகாரத்தை புக்கிட் அமான் போ​லீஸ் த​லைமையகம் கையாளும் என்று அவர் குறிப்பிட்டார். அந்த ஆடவர் கடத்தப்படுவதற்கு முன்னதாக அவர் கைது செய்யப்பட்டு, சாலாக் செலத்தான் பாரு போ​லீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார் என்பது விசாரணை​யில் தெரியவந்துள்ளதாக ஏசிபி சாம் ஹலிம் மேலும் கூறினார்.

Related News