Mar 31, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொற்றுப் பரவல்
தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொற்றுப் பரவல்

Share:

அலோர் ஸ்டார், ஏப்ரல்.27-

கெடா, யானில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொற்று பரவியதை அம்மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

கெடா மாநில வீட்டு வசதி, ஊராட்சி மன்றம், சுகாதார ஆட்சிக்குழுத் தலைவர் மன்சோர் ஸாகாரியா இது குறித்து கூறுகையில், தனியார் முகாம் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற 763 பேரில் 39 மாணவர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் காய்ச்சல், இருமல், உடலில் தடிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இருப்பினும், தொற்று குறித்து மேலும் கருத்து தெரிவிக்க மறுத்த அவர், இது குறித்து மேலும் தகவல்களைப் பெற இன்று மாலை அந்த முகாம் தளத்திற்குச் செல்லவிருப்பதாகத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் சுங்கை பட்டாணியில் உள்ள சுல்தான் ஹாலிம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து மாநில சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்திற்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மன்சோர் தெரிவித்தார்.

Related News

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்:  தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்: தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்