Mar 1, 2026
Thisaigal NewsYouTube
93-வது ஆயுதப்படை நாள் வாழ்த்து: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பாராட்டு
தற்போதைய செய்திகள்

93-வது ஆயுதப்படை நாள் வாழ்த்து: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பாராட்டு

Share:

கோலாலம்பூர், மார்ச்.01-

மலேசியாவின் 93-வது ஆயுதப்படை நாளை முன்னிட்டு, நாட்டின் அனைத்து ஆயுதப்படை வீரர்களுக்கும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும் அமைதியை நிலைநாட்டுவதிலும் ஆயுதப் படையினர் ஆற்றிவரும் தன்னலமற்ற சேவையையும் தியாகங்களையும் மலேசிய ஆயுதப் படைகளின் உச்ச தளபதியான மாமன்னர் வெகுவாகப் பாராட்டினார். வீரர்கள் அனைவரும் நேர்மையுடனும் தொழில்முறைத் திறனுடனும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மறைந்த வீரர்களின் ஆதன் அமைதி பெறவும் வேண்டிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Related News