இந்த வாரம் வெள்ளிக்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் மலேசியக் கிண்ணக் காற்பந்து போட்டி நடக்க உள்ளது. அந்த இறுதிச் சுற்று ஆட்டத்தில், ஜேடிதி அணியும் திரங்கானு ஃப்சி அணியும் மோத இருக்கின்றன.
அதனை ஒட்டி, புக்கிட் ஜாலில் எல் ஆர் டி சேவை அதிகாலை 1.00 மணி வரை நீடிக்கும் என ரெபிட் ரயில் எச்டிஎன் பிஎச்டி தெரிவித்தார்.
மாலை உச்ச நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆதரவாளர்கள் மாலை 5 மணிக்கு முன்னதாக மைதானத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.








