Mar 18, 2026
Thisaigal NewsYouTube
வழக்கறிஞர் நிறுவனங்களில் லஞ்சம் பெற்ற 49 வங்கி அதிகாரிகள் குற்றஞ்சாட்டப்படுவர்
தற்போதைய செய்திகள்

வழக்கறிஞர் நிறுவனங்களில் லஞ்சம் பெற்ற 49 வங்கி அதிகாரிகள் குற்றஞ்சாட்டப்படுவர்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.06-

சில வழக்கறிஞர் நிறுவனங்களில் லஞ்சம் பெற்று வந்த 49 வங்கி அதிகாரிகள், இந்த நவம்பர் மாதத்தில் நீதிமன்றத்தில் கட்டம் கட்டமாக குற்றஞ்சாட்டப்படுவர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தகவல்கள் கூறுகின்றன.

இந்த 49 வங்கி அதிகாரிகளையும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு அனுமதி கிடைத்து விட்டது. அவர்கள் அனைவரும் ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை வாடிக்கையாளர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைத் தயார்படுத்துவதில் இந்த வங்கி அதிகாரிகள் சுயமாகவே சில வழக்கறிஞர் நிறுவனங்களை நியமித்து, அதன் மூலம் கமிஷன் என்ற போர்வையில் லஞ்சம் பெற்று வந்துள்ளனர்.

வங்கி அதிகாரிகளுக்கும், சில வழக்கறிஞர் நிறுவனங்களுக்கும் இடையில் வங்கி பண பரிவர்த்தனை, சந்தேகத்திற்கு இடமாக மாறியதைத் தொடர்ந்து இவர்களின் நடவடிக்கை ஆராயப்பட்டது.

கடந்த 2024 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் தொடங்கிய ஓப் டைகர் சோதனை நடவடிக்கையின் மூலம் இவர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர்.

Related News

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொழிலாளியின் தண்டனை இரத்து: 8 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொழிலாளியின் தண்டனை இரத்து: 8 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை