Aug 6, 2026
Thisaigal NewsYouTube
தன் குழந்தைகளை துன்புறுத்திய குற்றத்திற்காக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டா
தற்போதைய செய்திகள்

தன் குழந்தைகளை துன்புறுத்திய குற்றத்திற்காக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டா

Share:

டிச. 27-

எகிப்தை சேர்ந்த 37 வயது ஆடவர் ஒருவர், தன் குழந்தைகளை துன்புறுத்திய குற்றத்திற்காக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். அவர் தன் நான்கு வயது மகனின் கழுத்தை தொலைபேசி கம்பியால் சுற்றியதாகவும், ஒரு வயது மகளை கட்டிலில் தூக்கி எறிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி காலை பிரிக்பீல்ட்ஸில் உள்ள அவரது வாடகை வீட்டில் நடந்துள்ளது.

குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31 (1) (a)இன் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சம் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அரசு வழக்கறிஞர் oshua Tee Yee Khuan , குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். ஏனெனில், இது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்றும், மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கறிஞர் யாரும் இல்லை என்றும் அவர் கூறினார்.

நீதிபதி Siti Aminah Ghazali , வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கறிஞர் நியமிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு