தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு கீழறுப்பு முயற்சியையும் தாம் பொருட்படுத்தப் போவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வாக்குமூலத்தின் மூலமாக தங்களுக்கு ஆதரவு இருப்பதாக கூறி, சிலர் செயல்பட்டாலும் அதற்கு முன்னுரிமை அளிக்கப் போவதில்லை என்று பிரதமர் விளக்கினார்.
தம்மைப் பொறுத்தவரையில் தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வலுவாக உள்ளது. அந்த அரசாங்கம் தனது தவணைக்காலத்தை நிச்சயம் நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்கிடையில் கீழறுப்பு முயற்சி தொடர்பாக வரக்கூடிய செய்திகளை தாம் கண்டு கொள்ளப் போவதில்லை என்று அன்வார் விளக்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


