தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு கீழறுப்பு முயற்சியையும் தாம் பொருட்படுத்தப் போவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வாக்குமூலத்தின் மூலமாக தங்களுக்கு ஆதரவு இருப்பதாக கூறி, சிலர் செயல்பட்டாலும் அதற்கு முன்னுரிமை அளிக்கப் போவதில்லை என்று பிரதமர் விளக்கினார்.
தம்மைப் பொறுத்தவரையில் தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வலுவாக உள்ளது. அந்த அரசாங்கம் தனது தவணைக்காலத்தை நிச்சயம் நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்கிடையில் கீழறுப்பு முயற்சி தொடர்பாக வரக்கூடிய செய்திகளை தாம் கண்டு கொள்ளப் போவதில்லை என்று அன்வார் விளக்கினார்.

Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


