தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு கீழறுப்பு முயற்சியையும் தாம் பொருட்படுத்தப் போவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வாக்குமூலத்தின் மூலமாக தங்களுக்கு ஆதரவு இருப்பதாக கூறி, சிலர் செயல்பட்டாலும் அதற்கு முன்னுரிமை அளிக்கப் போவதில்லை என்று பிரதமர் விளக்கினார்.
தம்மைப் பொறுத்தவரையில் தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வலுவாக உள்ளது. அந்த அரசாங்கம் தனது தவணைக்காலத்தை நிச்சயம் நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்கிடையில் கீழறுப்பு முயற்சி தொடர்பாக வரக்கூடிய செய்திகளை தாம் கண்டு கொள்ளப் போவதில்லை என்று அன்வார் விளக்கினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


