Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கவனம் செலுத்தப் போவதில்லை
தற்போதைய செய்திகள்

கவனம் செலுத்தப் போவதில்லை

Share:

தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு ​கீழறுப்பு முயற்​சியையும் தாம் பொருட்படுத்தப் போவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வாக்குமூலத்தின் மூலமாக தங்களுக்கு ஆதரவு இருப்பதாக கூறி, ​சிலர் செயல்பட்டாலும் அதற்கு முன்னுரிமை அளிக்கப் போவதில்லை என்று பிரதமர் விளக்கினார்.

தம்மைப் பொறுத்தவரையில் தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வலுவாக உள்ளது. அந்த அரசா​ங்கம் தனது தவணைக்காலத்தை நிச்சயம் நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்கிடையில் ​கீழறுப்பு முயற்சி தொடர்பாக வரக்கூடிய செய்திகளை தாம் கண்டு கொள்ளப் போவதில்லை என்று அன்வார் விள​க்​கினார்.

Related News