Jul 4, 2026
Thisaigal NewsYouTube
24 மணி நேரத்தில் 2 மாணவர்கள் அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

24 மணி நேரத்தில் 2 மாணவர்கள் அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து மரணம்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-

கோலாலம்பூர், ஸ்தாபாக், தாமான் மெலாத்தியில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு மாணவர்கள் தாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி வீடுகளிலிருந்து விழுந்து உயிரை மாய்த்துக் க்.

கோலாலம்பூர் தார் கல்லூரியின் அருகில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் இந்த இரு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. உயிரிழந்த இரண்டு மாணவர்களும் அருகில் உள்ள துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக மாணவர்கள் ஆவார்.

நேற்று காலை 6.45 மணிக்கு அந்த பல்கலைக்கழகம் அருகில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் 22 வயதுடைய மாணவி ஒருவர், 22 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார்.

அதே அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் இரவு 8.30 மணிக்கு 21 வயதுடைய ஒரு மாணவன் கீழே விழுந்து மரணமுற்றார். அந்த மாணவன் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் உச்சத்தில் உள்ள கெஃபேடேரியாவிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்று, மற்றொன்றுடன் தொடர்பு இல்லை என்ற போதிலும் இரண்டுமே ஒரே வீடமைப்புப் பகுதியில் நடந்திருப்பது அந்தப் பகுதியில் தங்கியுள்ள மாணவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது