May 26, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதக்குடியேறிகளுக்கான பொது மன்னிப்புத்திட்டம், முடிவடைய இன்னும் 15 நாட்களே உள்ளன
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதக்குடியேறிகளுக்கான பொது மன்னிப்புத்திட்டம், முடிவடைய இன்னும் 15 நாட்களே உள்ளன

Share:

புத்ராஜெயா, டிச. 16-


மலேசியாவில் தங்கியுள்ள சட்டவிரோதக்குடியேறிகள், எவ்வித சட்ட நடவடிக்கைக்கும் உட்படாமல், வெறும் அபராதத் தொகையை மட்டும் செலுத்திவிட்டு தங்கள் தாயகத்திற்கு திரும்புவதற்கு குடிநுழைவுத்துறை வழங்கிய பொது மன்னிப்புத்திட்டம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

கடைசி நேரத்தில் அதிகமான சட்டவிரோதக்குடியேறிகள், குடிநுழைவு அலுவலகங்களிலும், விமான நிலையங்களிலும் திரளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு குடிநுழைவுத்துறை அமல்படுத்தியுள்ள பொது மன்னிப்புக்குரிய திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொள்வதற்கும், அபராதத் தொகையை செலுத்துவதற்கும் நாடு முழுவதும் உள்ள குடிநுழைவு அலுவலகங்கள் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 28 ஆம் தேதி ஆகிய இரண்டு சனிக்கிழமைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தினங்களில் சட்டவிரோதக்குடியேறிகளின் நான்காயிரம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் ஸக்காரியா ஷாபன் அறிவித்துள்ளார்.

நாடு திரும்புவதற்கும், சட்டப்பூர்வத் தொழிலாளர்களாக வேலை செய்வதற்கும் இதுவரையில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 471 பேர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி வரையில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 107 பேர் தங்கள் நாடுகளுக்கு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு