Apr 20, 2026
Thisaigal NewsYouTube
போர்ச் சூழலுக்கு மத்தியிலும் ஹார்முஸ் நீரிணையைத் தாண்டிய மலேசிய மற்றும் இந்தியக் கப்பல்கள்
தற்போதைய செய்திகள்

போர்ச் சூழலுக்கு மத்தியிலும் ஹார்முஸ் நீரிணையைத் தாண்டிய மலேசிய மற்றும் இந்தியக் கப்பல்கள்

Share:

ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஹார்முஸ் நீரிணையை மலேசியா மற்றும் இந்தியத் தொடர்புடைய எண்ணெய்க் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளது அனைத்துலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, மலேசியாவின் பெட்ரோனாஸ் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட 'Ocean Thunder' உட்பட ஏழு கப்பல்கள் ஈரானின் சிறப்பு அனுமதியுடன் இந்தப் பாதையைப் பயன்படுத்தியுள்ளன. இதில் மலாக்கா மற்றும் பெங்கெராங் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களும் அடங்கும். இதேபோல், இந்தியாவிற்குச் சமையல் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல்களும் எவ்வித பாதிப்புமின்றித் தங்களது இலக்குகளை அடைந்துள்ளன. தூதரக ரீதியான ஒருங்கிணைப்புகள் மூலம் உலகளாவிய எரிபொருள் விநியோகம் தடையின்றித் தொடர்வதை இது உறுதிப்படுத்தியுள்ளது.

Related News