பாடு என்ற முதன்மை தரவுகள் தளம் பதிவிற்கான புகைப்படம் மற்றும் அடையாள அட்டையை பதிவேற்றம் செய்யும் E-KYC எனப்படும் வாடிக்கையாளர்களை அடையாளம் காணும் செயல்முறைக்கு மூன்று நாட்கள் எடுக்கப்படும் என்கிற கூற்றை பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி மறுத்தார்.
E-KYC செயல்பாடு குறைந்த பட்சம் மூன்று நாட்கள் எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து இதுவரையில் PADU திட்டத்தை பதிவு செய்யப்பட்ட பயனர்கள் 5 நிமிடத்திற்குள் பதிவேற்றம் செய்து முடித்ததாக ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.
நேற்று மாலை 5 மணி வரையில் 40,000 க்கும் மேற்பட்ட E-KYC உறுதி செய்யப்பட்டதுடன் இன்னும் 300 பதிவுகள் மட்டுமே சரிபார்க்கவுள்ளதாக ரஃபிசி கூறினார்.
முன்னாள் பாங்ஙி நாடாளுமன்ற உறுப்பினர் ஒங் கியான் மிங் பொதுமக்களை விரைவாக இணையத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், E-KYC ஒப்புதலுக்கு மூன்று நாட்கள் எடுக்கும் என்று கூறியதை தொடர்ந்து ரஃபிசி ரம்லி இக்கூற்றை வெளியிட்டார்.








