Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ரத்தினவள்ளி அம்மாவுடன் கால்பந்தாட்டக் club
தற்போதைய செய்திகள்

ரத்தினவள்ளி அம்மாவுடன் கால்பந்தாட்டக் club

Share:

கிள்ளான் வாட்டாரத்தில் முன்னணி கால்பந்தாட்ட கிளப்பான கிளேங் எக்ஸகூதீவ் மாஸ்டர் எஃப்சி யின் 33 ஆம் ஆண்டு நிறைவு விழா, கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி சனிக்கிழமை, கிள்ளான் ஹை தியான் லோ உணவகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மனிதநேயமாமணி ரத்தினவள்ளி அம்மாள், அவரின் கணவர் விஜயராஜ் மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோரின் சிறப்பு வருகையோடு நடைபெற்ற இவ்விழாவில் கிளேங் எக்ஸகூதீவ் மாஸ்டர் எஃப்சி கிளப்பின் உறுப்பினர்கள் மற்றும் கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த 18 கால்பந்தாட்டக் குழுவினர் உட்பட சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்தியர் இளைஞர்கள் கால்பந்தாட்டத் துறையில் சிறந்த விளங்க வேண்டும், தங்கள் பொழுதை நல்ல முறையில் கழிக்க வேண்டும் என்ற நோக்கில் 33 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கிளேங் எக்ஸகூதீவ் மாஸ்டர் எஃப்சி, பலதரமான ஆட்டக்காரர்களை உருவாக்கியிருப்பதுடன் பல குழுக்களுடன் நட்புமுறை ஆட்டத்தில் பங்கு கொண்டு, நட்பு பாராட்டி வந்துள்ளதாக இந்த 33 ஆம் ஆண்டு நிறைவு விழாவின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் இளம்பரிதி தெரிவித்தார்.

இக்கால்பந்தாட்டக் கிளப்பின் 33 ஆண்டு கால பயணத்தில் இக்கிளப்புடன் ஒன்றித்து பயணம் செய்து பெரும் ஆதரவு நல்கிய உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் பயிற்சிநர்களில் சிலர் இன்று உயிருடன் இல்லை என்றாலும் அவர்களின் பங்களிப்பை மகத்தானதாகும்.

அன்பு, நட்பின் அடையாளமாக ஏற்பாடு செய்யக்கூடிய இந்த நிகழ்வின் வாயிலாக மறைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏதாவது உதவி நல்க வேண்டும் என்ற நோக்கில் மனிதநேயமாமணி ரத்தினவள்ளி அம்மாள் விஜயராஜ் சிறப்பு வருகையுடன் இந்த 33 ஆம் ஆண்டு நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக நிகழ்வு ஏற்பாட்டுக்குழுத் தலைவர் இளம் பரிதி தெரிவித்தார்.

18, 19 வயதில் கால்பந்தாட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய தாங்கள் இன்று 50 வயதை கடந்த போதிலும் இன்னமும் கிளேங் எக்ஸகூதீவ் மாஸ்டர் எஃப்சி கிளப்பை வெற்றிகரமாக வழிநடத்த முடிகிறது என்றால் தங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமைதான் காரணம் என்கிறார் அந்தக் கிளப்பின் கேப்டனும், தலைவருமான ராமு என்ற வேங்கையா.

கிளேங் எக்ஸகூதீவ் மாஸ்டர் எஃப்சி நற்பெயருக்கு எந்தவொரு களங்கமும் ஏற்படாமல் கடந்த 33 ஆண்டு காலமாக வழிநடத்தப்படும் இந்த கிளப்பின் ஒற்றுமை தொடர்ந்து கட்டிக்காக்கப்பட்டு, கால்பந்தாட்டத்தில் சிறந்த கிளப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் நோக்கமாகும் என்று ராமு என்ற வேங்கையா குறிப்பிட்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்