May 25, 2026
Thisaigal NewsYouTube
இலங்கையில் ஓன்லைன் நிதி மோசடி  4 மலேசியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் 10 பேர் கைது
தற்போதைய செய்திகள்

இலங்கையில் ஓன்லைன் நிதி மோசடி 4 மலேசியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் 10 பேர் கைது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 16-

ஓன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு மலேசியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் பத்து பேரை இலங்கை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

நான்கு மலேசியர்களும், 6 இதர நாட்டினரும் இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் வட மேற்கு மாநிலமான புத்தாளத்தின் கடலோரப்பகுதியான Chilaw என்ற இடத்தில் இலங்கைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

சம்பந்தப்பட்டவர்கள் Iranawila- சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் நிதி தொடர்புடைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கிடைக்கப்பெற்றத் தகவலின் அடிப்படையில் அந்த பத்து பேரும் வளைத்துப்பிடிக்கப்பட்டதாக இலங்கை போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

நான்கு மலேசியர் ஆடவர்கள், எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த மூன்று ஆடவர்கள், ஒரு பெண், கென்யா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் சீனப்பிரஜை ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் போலீசார் குறிப்பிட்டனர்.

Related News

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது