Feb 12, 2026
Thisaigal NewsYouTube
மாதம் 250 வெள்ளியில் சொந்த வீடு: பினாங்கு மக்களின் கனவை நனவாக்கும் புதிய வீட்டுத் திட்டம்
தற்போதைய செய்திகள்

மாதம் 250 வெள்ளியில் சொந்த வீடு: பினாங்கு மக்களின் கனவை நனவாக்கும் புதிய வீட்டுத் திட்டம்

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.11-

பினாங்கு மாநிலத்தின் 'முத்தியாரா வீடமைப்புத் திட்டத்தின் கீழ், வடக்கு செபராங் பிறை மாவட்டத்தில் 780 புதிய அடுக்குமாடி வீடுகளை வழங்குவதற்கான முக்கிய முன்னெடுப்புகளை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

கப்பாளா பத்தாஸில் நடைபெற்ற இந்நிகழ்வில், பினாங்கு செத்தியா அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் 640 அடுக்குமாடி வீடுகள் திட்டத்திற்கான தொடக்கமும், விஸ்தா பெர்டானா திட்டத்தில் 144 அடுக்குமாடி வீடுகளை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. பெர்தாம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ரீஸால் மெரிகான் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாநிலத்தின் வீட்டு வசதி இலக்கை எட்டுவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், ஒரு புதிய மற்றும் எளிய முறையில் 'வாடகைக்கு எடுத்து வாங்குதல்' முறையை டத்தோ ஶ்ரீ சுந்தராஜு அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தின்படி, விஸ்தா பெர்டானா திட்டத்தில் வாங்கப்பட்டுள்ள 144 அடுக்குமாடி வீடுகளுக்கு மக்கள் மாதம் வெறும் 250 வெள்ளி மட்டுமே 15 ஆண்டுகளுக்குச் செலுத்தினால் போதுமானது என்று டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

இதற்கு வங்கி கடன் தேவையில்லை என்பதோடு, வழக்கமான வீட்டு வாங்குதலில் இருக்கும் முன்வைப்புத் தொகை சுமையையும் மாநில அரசாங்கம் நீக்கியுள்ளது. இதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் எவ்வித வங்கிச் சிக்கலுமின்றி தங்களது சொந்த வீட்டை அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று சுந்தராஜு விளக்கினார்.

Related News

பாரம்பரிய ஆலயங்களின் விவகாரத்தை மனிதாபிமானத்துடனும், வரலாற்றுப் பின்னணியுடனும் கையாள வேண்டும் - பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து

பாரம்பரிய ஆலயங்களின் விவகாரத்தை மனிதாபிமானத்துடனும், வரலாற்றுப் பின்னணியுடனும் கையாள வேண்டும் - பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து

மலேசிய TVET தரம் இனி  அனைத்துலக தரத்திற்கு இணையாக உயரும்: அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவிப்பு

மலேசிய TVET தரம் இனி அனைத்துலக தரத்திற்கு இணையாக உயரும்: அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவிப்பு

புதிய பாடத்திட்டம் 2027: 5 மற்றும் 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே வரலாறு பாடம் - கல்வி அமைச்சு அறிவிப்பு

புதிய பாடத்திட்டம் 2027: 5 மற்றும் 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே வரலாறு பாடம் - கல்வி அமைச்சு அறிவிப்பு

வலுவான பொருளாதாரத் தரவுகளால் மலேசிய ரிங்கிட் தொடர்ந்து ஏற்றம்

வலுவான பொருளாதாரத் தரவுகளால் மலேசிய ரிங்கிட் தொடர்ந்து ஏற்றம்

ஜோகூர் பாரு: குப்பை மேட்டிற்குள் தங்கியிருக்கும் மூதாட்டி - அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்

ஜோகூர் பாரு: குப்பை மேட்டிற்குள் தங்கியிருக்கும் மூதாட்டி - அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்

பார்வையற்ற கணவரைத் தம்பியுடன் சேர்ந்து கொலை செய்த பெண்: 33 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதிச் செய்தது கூட்டரசு நீதிமன்றம்

பார்வையற்ற கணவரைத் தம்பியுடன் சேர்ந்து கொலை செய்த பெண்: 33 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதிச் செய்தது கூட்டரசு நீதிமன்றம்