கடந்த வியாழன் முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் குருப் கெராக் ஹாஸ் இன் முன்னாள் கமாண்டோ, 73 வயது அப் மனான் கெரி இன்று பிற்பகல் 5 மணியளவில், குளுவாங், கம்போங் பாலேம்பாங்கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் இறந்து கிடந்தார்.
இது குறித்து பேசிய குளுவாங் காவல் துறை தலைவர் பஹ்ரின் முஹமாட் நோ குறிப்பிடுகயில், அப் மனான் கெரி இன் சடலத்தை உள்ளூர் கால்நடை வளர்க்கும் ஆடவர் ஒருவர் கண்டறிந்து தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
அந்த சடலம் தமது தந்தையுடையது என அவரது மகன் 29 வயது முஹமாட் ஷாஃபுல்லா உறுதிப்படுத்தினார். பின்னர், அந்த சடலத்தை என்சே பெசார் ஹாஜா கல்சோம்’ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.








