Jan 2, 2026
Thisaigal NewsYouTube
பெக்கான் கடற்கரையில் வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள்
தற்போதைய செய்திகள்

பெக்கான் கடற்கரையில் வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள்

Share:

பெக்கான், ஜனவரி.02-

நெனாசி, கம்போங் தஞ்சோங் கடற்கரையில், விண்வெளியிலிருந்து விழுந்ததாகச் சந்தேகிக்கப்படும் மர்மப் பொருள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில், உள்ளூர்வாசி ஒருவர் இப்பொருளைக் கண்டறிந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்ததாக பெக்கான் போலீஸ் தலைவர் ஸைடி மாட் ஸின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்பொருள் குறித்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன அமைச்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளமுடைய அப்பொருளானது, விண்வெளியில் இருந்து தான் விழுந்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதே வேளையில் அப்பொருளானது கதிர்வீச்சு அபாயம் இல்லாதது என்பதும் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி அப்பொருளானது தற்போது நெனாசி போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Related News

மாராங் சிறைக்குள் போதைப் பொருள் கடத்த உதவிய வழக்கறிஞர் கைது

மாராங் சிறைக்குள் போதைப் பொருள் கடத்த உதவிய வழக்கறிஞர் கைது

பள்ளிச் சீருடைகளை தேசிய அளவில் ஒருமைப்படுத்தும் நடவடிக்கை: 2027-ம் ஆண்டில் அமல்படுத்த கல்வி அமைச்சு திட்டம்

பள்ளிச் சீருடைகளை தேசிய அளவில் ஒருமைப்படுத்தும் நடவடிக்கை: 2027-ம் ஆண்டில் அமல்படுத்த கல்வி அமைச்சு திட்டம்

கார் தீப்பிடித்து எரிந்ததில் தம்பதி காயம்

கார் தீப்பிடித்து எரிந்ததில் தம்பதி காயம்

புத்தாண்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக 12,000 சம்மன்கள் – போலீஸ் தகவல்

புத்தாண்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக 12,000 சம்மன்கள் – போலீஸ் தகவல்

மியன்மார் நரகத்தில் ஓர் ஆண்டு: 'காதல் வலை' வீச மறுத்த மலேசிய இளைஞருக்கு இரும்புத் தடியால் அடி, மின்சார அதிர்ச்சித் தாக்குதல்!

மியன்மார் நரகத்தில் ஓர் ஆண்டு: 'காதல் வலை' வீச மறுத்த மலேசிய இளைஞருக்கு இரும்புத் தடியால் அடி, மின்சார அதிர்ச்சித் தாக்குதல்!

இலட்சங்களில் இலாபம்; ஆனால் உரிமத்திற்கு 'மிச்சம்'! 22 விளம்பர நிறுவனங்களுக்கு ரெம்பாவ் மாவட்ட மன்றம் விடுத்த அதிரடி எச்சரிக்கை!

இலட்சங்களில் இலாபம்; ஆனால் உரிமத்திற்கு 'மிச்சம்'! 22 விளம்பர நிறுவனங்களுக்கு ரெம்பாவ் மாவட்ட மன்றம் விடுத்த அதிரடி எச்சரிக்கை!