பெக்கான், ஜனவரி.02-
நெனாசி, கம்போங் தஞ்சோங் கடற்கரையில், விண்வெளியிலிருந்து விழுந்ததாகச் சந்தேகிக்கப்படும் மர்மப் பொருள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில், உள்ளூர்வாசி ஒருவர் இப்பொருளைக் கண்டறிந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்ததாக பெக்கான் போலீஸ் தலைவர் ஸைடி மாட் ஸின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அப்பொருள் குறித்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன அமைச்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளமுடைய அப்பொருளானது, விண்வெளியில் இருந்து தான் விழுந்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதே வேளையில் அப்பொருளானது கதிர்வீச்சு அபாயம் இல்லாதது என்பதும் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி அப்பொருளானது தற்போது நெனாசி போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.








