Aug 6, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பை வீட்டுக்காவலில் வைப்பதற்கு புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் சட்டத்துறை அலுவலகம் அறிக்கை
தற்போதைய செய்திகள்

நஜீப்பை வீட்டுக்காவலில் வைப்பதற்கு புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் சட்டத்துறை அலுவலகம் அறிக்கை

Share:

கோலாலம்பூர், டிச. 28-


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தம்முடைய எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் கழிக்க விரும்பினால், அவர், மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியத்திடம் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகம் இன்று கேட்டுக்கொண்டுள்ளது.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 42 பிரிவின் முதலாவது விதியின் கீழ் கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டரசு பிரதேசத்தில் நிகழக்கூடிய எந்தவொரு குற்றத்திற்கும் தண்டனைக்கு ஆளாகும் நபருக்கு / பொது மன்னிப்பு வழங்குவதற்கும், அல்லது தண்டனையை ஒத்திவைப்பதற்கும் அல்லது தண்டனையிலிருந்து நிவாரணம் அளிப்பதற்கும் மாமன்னருக்கு அதிகாரம் வழங்குகிறது என்று சட்டத்துறை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 42 பிரிவின் இரண்டாவது விதியின் கீழ் நீதிமன்றத்தினால் விதிக்கப்படும் எந்தவொரு தண்டனையையும் ரத்து செய்வதற்கும், இடை நீக்கம் செய்யவும், தண்டனையை குறைப்பதற்கும் மாமன்னருக்கு அதிகாரம் வழங்குகிறது என்று சட்டத்துறை அலுவலகம் சுட்டிக்காட்யுள்ளது.

எனவே தம்முடைய எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு நஜீப் விரும்புவாரோயானால் மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியத்திடம் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்