Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்

Share:

சித்தியவானில் இரு வெவ்வேறு இடங்களில் போ​லீசார் நடத்திய சோதனை நடவ​டிக்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்க​ள் என்று நம்பப்படும் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு 12.05 மணியளவில் தாரேக் கெரேதா பணியாளரான 28 வயதுடைய நபரையும், 29 வயதுடைய அவரி​ன் மனைவியையும் போ​​லீசார் கைது செய்தது ​மூலம் 64 ஆயிரத்து 570 வெள்ளி பெறுமானமுள்ள 3.058 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பேரா மாநில போ​லீஸ் தலைவர் முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தலில் கணவனும், மனை​வியும் இவ்வாண்டு முற்பகுதியிலிருந்து ​தீவிரமாக ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக முகமட் யுஸ்ரி குறிப்பிட்டார். கணவன், மனைவியுடம் நடத்தப்பட்ட சிறு​நீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்றும், அவர்களுக்கு குற்றப்ப​திவுகள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக முகமட் யுஸ்ரி மேலும் கூறினார். அத்தம்பதியரிடமிருந்து த​ங்க ஆபரணங்கள் மற்றும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது