சித்தியவானில் இரு வெவ்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று நம்பப்படும் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு 12.05 மணியளவில் தாரேக் கெரேதா பணியாளரான 28 வயதுடைய நபரையும், 29 வயதுடைய அவரின் மனைவியையும் போலீசார் கைது செய்தது மூலம் 64 ஆயிரத்து 570 வெள்ளி பெறுமானமுள்ள 3.058 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலில் கணவனும், மனைவியும் இவ்வாண்டு முற்பகுதியிலிருந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக முகமட் யுஸ்ரி குறிப்பிட்டார். கணவன், மனைவியுடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்றும், அவர்களுக்கு குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக முகமட் யுஸ்ரி மேலும் கூறினார். அத்தம்பதியரிடமிருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது உயர்கல்விக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடி இலவசக் கல்வி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் படிவம் 6 மற்றும் மெட்ரிகுலேஷன் உயர்க்கல்வி அமைச்சின் கீழ் மாற்றம்: பிரதமர் அறிவிப்பு

2027 ஆம் ஆண்டு முதல், 6 வயதிலேயே முதலாம் ஆண்டு கல்வி: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிரடி அறிவிப்பு

ஒரே செயலியில் 38 அரசு சேவைகள்: 10 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து MyGOV மலேசியா சாதனை

பத்துமலை தைப்பூசம் 2026: பக்தர்களுக்கு நற்செய்தி! 2 நாட்களுக்கு கேடிஎம் ரயில் பயணம் முற்றிலும் இலவசம் - போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு


