சித்தியவானில் இரு வெவ்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று நம்பப்படும் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு 12.05 மணியளவில் தாரேக் கெரேதா பணியாளரான 28 வயதுடைய நபரையும், 29 வயதுடைய அவரின் மனைவியையும் போலீசார் கைது செய்தது மூலம் 64 ஆயிரத்து 570 வெள்ளி பெறுமானமுள்ள 3.058 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலில் கணவனும், மனைவியும் இவ்வாண்டு முற்பகுதியிலிருந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக முகமட் யுஸ்ரி குறிப்பிட்டார். கணவன், மனைவியுடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்றும், அவர்களுக்கு குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக முகமட் யுஸ்ரி மேலும் கூறினார். அத்தம்பதியரிடமிருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


