மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரை சிங்கப்பூர் பிரதமரின் துணைவியார் டத்தின் படுக்கா ஹோ சிங் மற்றும் அக்குடியரசின் உள்துறை, சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்த சந்திப்பானது, ஜோகூருக்கும், சிங்கப்பூருக்கும் இருந்து வரும் நீண்ட கால எல்லைத் தாண்டிய நட்பையும், நல்லெண்ணத்தையும் காட்டுகிறது என்று சுல்தான் இப்ராஹிம் வர்ணித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை ஜோகூர்பாரு, புக்கிட் செரேனா அரண்மனையில் இச்சந்திப்பு நடைபெற்றது. சுல்தானுடன் ஜோகூர் அரசியார் ராஜா ஸரித் சொபியாவும், துங்கு மாக்கோத்தா ஜோகூர், துங்கு இஸ்மாயிலும் கலந்து கொண்டனர்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


