ஹார்முஸ் நீரிணையிலிருந்து பயணித்து வரும், மலேசியாவிற்குச் சொந்தமான ஏழு கப்பல்களில், ஓஷன் தண்டர் என்ற கப்பல், ஈராக்கின் பஸ்ரா நகரிலிருந்து ஒரு மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்களுடன் மலேசியாவை வந்தடைந்துள்ளது.
இந்த கச்சா எண்ணெய்கள் தனது விரிவான விநியோக வலையமைப்பின் ஒரு பகுதியாகவும், நாட்டின் எரிபொருள் விநியோகம் நிலையாக இருக்க மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒன்றாக இருப்பதாகவும் பெட்ரோனாஸ் நிறுவனம் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த 1 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யானது, சுமார் 159 மில்லியன் லிட்டருக்கு சமமானது என்றும், இதனை சுத்திகரிக்க சுமார் 6 நாட்கள் ஆகும் என்றும் பெட்ரோனாஸ் தெரிவித்துள்ளது.
இந்த சுத்திகரிப்பின் மூலம், மில்லியன் கணக்கில், டீசல், பெட்ரோல், விமான எரிபொருள், எல்பிஜி எரிவாயு உள்ளிட்டவைகள் கிடைக்கும் என்பதால், நாட்டின் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.








