Mar 14, 2026
Thisaigal NewsYouTube
“கறைபடியாத வெளிப்படைத் தன்மை வேண்டும்" - புதிய இராணுவத் தளபதியிடம் மாமன்னர் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

“கறைபடியாத வெளிப்படைத் தன்மை வேண்டும்" - புதிய இராணுவத் தளபதியிடம் மாமன்னர் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், ஜனவரி.07-

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள இராணுவத் தளபதி டத்தோ அஸான் முகமட் ஒத்மானை இன்று சந்தித்த மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மலேசிய இராணுவத்தில் நேர்மை மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

கடந்த ஜனவரி 1ஆம் தேதி, 31-வது இராணுவத் தளபதியாக அஸான் முஹமட் ஒத்மான் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று புதன்கிழமை புக்கிட் துங்கு அரண்மனையில் இச்சந்திப்பானது நடைபெற்றது.

ஊழல் என்பது தேசியப் பாதுகாப்புப் படைகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதை சுட்டிக் காட்டிய மாமன்னர், இராணுவத்தில் அதிகார துஷ்பிரயோகமோ, தவறான நடத்தைகளோ சகித்துக் கொள்ளப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இராணுவ வீரர்கள் அனைவரும் உயர்ந்த நேர்மைத் தரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் மாமன்னர் வலியுறுத்தினார்.

அதே வேளையில், மலேசிய இராணுவத்தில் கறைபடியாத, வெளிப்படையான நிர்வாகத்தை மேம்படுத்துவதில் அஸான் முஹமட் ஒத்மான் ஒரு முன்மாதிரியாகத் திகழ்வார் என்ற தனது எதிர்பார்ப்பையும், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இச்சந்திப்பில் வெளிப்படுத்தினார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்