May 16, 2026
Thisaigal NewsYouTube
பகடிவதை: 6 மாணவர்கள் விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

பகடிவதை: 6 மாணவர்கள் விடுவிப்பு

Share:

பாசீர் மாஸ், ஆகஸ்ட்.25-

மாணவர் ஒருவரைப் பகடிவதை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணர்கள், போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நான்காம் படிவத்தைச் சேர்ந்த அந்த 6 மாணவர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கை துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அலுவலகத்தின் அடுத்தக் கட்ட உத்தவுக்காக போலீஸ் துறை காத்திருப்பதாக கிளந்தான், பாசீர் மாஸ் மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் காமா அஸுரால் முகமட் தெரிவித்துள்ளார்.

Related News