பெட்டாலிங் ஜெயா, ஜன.27-
மலேசியரை தங்களின் வாழ்க்கைத் துணையாக கரம் பிடிக்கும் அந்நிய நாட்டைச் சேர்ந்தவருக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரந்தர வசிப்பிட அந்தஸ்தான PR தகுதியை இயல்பாகவே வழங்க வேண்டும் என்று அரசு சாரா இயக்கம் ஒன்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஐந்து ஆண்டுகள் என்பது மலேசியரும், அந்நிய நாட்டவரும் இல்லறத்தில் இணைந்ததற்கும், அவர்களுக்கு இடையிலான தாம்பத்திய வாழ்க்கையின் நல்லிணக்கத்திற்கும் போதுமான காலக்கெடுவாகும். இந்த 5 ஆண்டுகளைக் கடக்கும் மலேசியரை மணந்துள்ள ஓர் ஆண் அல்லது பெண் இயல்பாகவே மலேசிய நிரந்தர அந்தஸ்தை பெறுவதற்கு தகுதியுடையவர் என்ற ஓர் அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று அந்நிய இணையருக்கான ஆதரவு குழு ஒன்று இன்று வலியுறுத்தியுள்ளது.
மலேசியரை திருமணம் செய்து கொண்ட அந்நிய நாட்டவர் பலர், PR அந்தஸ்து கோரி, செய்து கொண்ட பல விண்ணப்பங்கள் தேசிய பதிவு இலாகாவினால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்த இந்த ஐந்து ஆண்டு கால அவகாசாத்தை அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.







