Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலேசியரைக் கரம் பிடிக்கும் அந்நியருக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு PR அந்தஸ்தை வழங்குவீர்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன.27-

மலேசியரை தங்களின் வாழ்க்கைத் துணையாக கரம் பிடிக்கும் அந்நிய நாட்டைச் சேர்ந்தவருக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரந்தர வசிப்பிட அந்தஸ்தான PR தகுதியை இயல்பாகவே வழங்க வேண்டும் என்று அரசு சாரா இயக்கம் ஒன்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஐந்து ஆண்டுகள் என்பது மலேசியரும், அந்நிய நாட்டவரும் இல்லறத்தில் இணைந்ததற்கும், அவர்களுக்கு இடையிலான தாம்பத்திய வாழ்க்கையின் நல்லிணக்கத்திற்கும் போதுமான காலக்கெடுவாகும். இந்த 5 ஆண்டுகளைக் கடக்கும் மலேசியரை மணந்துள்ள ஓர் ஆண் அல்லது பெண் இயல்பாகவே மலேசிய நிரந்தர அந்தஸ்தை பெறுவதற்கு தகுதியுடையவர் என்ற ஓர் அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று அந்நிய இணையருக்கான ஆதரவு குழு ஒன்று இன்று வலியுறுத்தியுள்ளது.

மலேசியரை திருமணம் செய்து கொண்ட அந்நிய நாட்டவர் பலர், PR அந்தஸ்து கோரி, செய்து கொண்ட பல விண்ணப்பங்கள் தேசிய பதிவு இலாகாவினால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்த இந்த ஐந்து ஆண்டு கால அவகாசாத்தை அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை