பினாங்கு மாநிலத்தில் சட்டவிரோத பந்தயக்காரர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 50 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பினாங்கு போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையானது பினாங்கு தீவின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் உள்ள சட்டவிரோத பந்தய மையங்களில் பெரு நிலத்தில் உள்ள செபராங் பிறை வடக்கு மற்றும் மத்திய செபராங் பிறை மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் ஏழு அதிகாரிகள் மற்றும் 64 போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை உறுப்பினர்கள் ஈடுபடுத்தப் பட்டதாக பினாங்கு காவல்துறை முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபட்ட அல்லது ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக நான்கு பேரைக் போலீசார் கைது செய்தனர்.

தற்போதைய செய்திகள்
சட்டவிரோத பந்தயம்- போலீஸ் அதிரடியில் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல், 230 பேருக்கு சம்மன்
Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


