Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

யுத்த கால வெடிகுண்டு கண்டு பிடிப்பு

Share:

பாபார், பிப்.28-

இரண்டாவது உலகப் போரின் போது கைவிடப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் யுத்த கால வெடிகுண்டு ஒன்று, இன்று கண்டு பிடிக்கப்பட்டது.

சபா, பாபார், கினாருட் என்ற இடத்தில் தொழிற்சாலையின் அருகில் பூமி வேலைகள் நடைபெற்று வரும் கட்டுமானத் தளத்தில் அந்த வெடிகுண்டு மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்டது.

அதனைப் பார்த்த கட்டுமானத் தொழிலாளி, போலீசுக்கு தகவல் கொடுத்ததாக பாபார் மாவட்ட போலீஸ் தலைவர் கமாருடின் அம்போ சக்கா தெரிவித்தார்.

வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்த வெடிகுண்டு இன்னமும் செயல்பாட்டு தன்மையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அந்த வெடிகுண்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்கிழமை இதே போன்ற ஒரு வெடிகுண்டு அப்பகுதியில் மீட்கப்பட்டதையும் அவர் விளக்கினார்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை