டிஎபி வரலாற்றில் மிக உயரிய விருதைப்பெற்றுள்ள அதன் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், தம்மை டான்ஸ்ரீ என்று அழைப்பதை விட லிம் என்ற அழைக்கப்படுவதையே விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். இன்று மாமன்னரின் அதிகாரத்துவ பிறந்த நாளையொட்டி உயரிய விருதுகள் பெற்றவர்களில் 82 வயதான லிம் கிட் சியாங்கிற்கு டான்ஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
55 ஆண்டு கால தமது அரசியல் வாழ்க்கையில் அரசியலிருந்து ஓய்ப்பெற்றப்பின்னர் இந்த விருதை ஏற்பதற்கு தாம் முன்வந்த போதிலும் தமக்கு வழங்கப்பட்ட இந்த கெளவரத்திற்காக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அதிகமானோர் தம்மை டான்ஸ்ரீ என்று அழைத்து, தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட போதிலும் தாம் என்றுமே லிம் கிட் சியாங்தான். தம்மை லிம் என்று மக்கள் அழைப்பதையே தாம் விரும்புவதாக டிஎபி முன்னாள் தலைவரான லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.

Related News

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்


