கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரெலாவ் பகுதியிலுள்ள ஒரு வீட்டில், தனது தாயாரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 42 வயதான சூன் யோங் ஆன் என்பவரை, ஜார்ஜ் டவுன் உயர்நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
அவர் முன்வைத்த, 'மனநலக் குறைபாடு' சார்ந்த தற்காப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு, ஜூன் 15-ஆம் தேதி, மாலை 5.47 மணியளவில், லெபு ரெலாவ்விலுள்ள, 'தாமான் அலோர் விஸ்தா' குடியிருப்பு வளாகத்தில், 67 வயதான சுவா ஆ டிங் என்பவரை சூன் கொலை செய்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது.
அதன் படி, சூன் மீது குற்றவியல் சட்டம், பிரிவு 302-இன் கீழ், கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இக்குற்றத்திற்கு மரண தண்டனையோ அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அல்லது மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் குறைந்தது 12 பிரம்படிகளோ தண்டனையாக விதிக்கப்படலாம்.








