Jun 26, 2026
Thisaigal NewsYouTube
தாயைக் கொலை செய்த வழக்கில் மனநலக் குறைபாடு கொண்ட ஆடவர் விடுதலை
தற்போதைய செய்திகள்

தாயைக் கொலை செய்த வழக்கில் மனநலக் குறைபாடு கொண்ட ஆடவர் விடுதலை

Share:

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரெலாவ் பகுதியிலுள்ள ஒரு வீட்டில், தனது தாயாரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 42 வயதான சூன் யோங் ஆன் என்பவரை, ஜார்ஜ் டவுன் உயர்நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

அவர் முன்வைத்த, 'மனநலக் குறைபாடு' சார்ந்த தற்காப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு, ஜூன் 15-ஆம் தேதி, மாலை 5.47 மணியளவில், லெபு ரெலாவ்விலுள்ள, 'தாமான் அலோர் விஸ்தா' குடியிருப்பு வளாகத்தில், 67 வயதான சுவா ஆ டிங் என்பவரை சூன் கொலை செய்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது.

அதன் படி, சூன் மீது குற்றவியல் சட்டம், பிரிவு 302-இன் கீழ், கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இக்குற்றத்திற்கு மரண தண்டனையோ அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அல்லது மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் குறைந்தது 12 பிரம்படிகளோ தண்டனையாக விதிக்கப்படலாம்.

Related News

லாபுவான் விமான நிலைய  ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

லாபுவான் விமான நிலைய ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

ஜெலுத்தோங்  ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

ஜெலுத்தோங் ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் –  ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் – ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" –  ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" – ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்